சொகுசு பங்களாவை பெரிய விலைக்கு விற்ற ஹிட்மேன் ரோஹித் ஷர்மா? எவ்வளவு தொகை தெரியுமா..?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தனது வீடு ஒன்றை விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புனேவில் உள்ள மலைப்பிரதேசமான லொனாவாலா என்ற இடத்தில் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக ஆடம்பரமான வீடு ஒன்று இருந்தது. இந்த வீட்டை தற்போது ரூ.5.25 கோடிக்கு அவர் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதமே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகும், முன்பணமாக ரூ.26 லட்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது முழு தொகையும் செலுத்தி, சுஷ்மா அசோக் சாரஃப் என்பவர் ரோஹித் ஷர்மாவின் வீட்டை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும், தாங்கள் சுற்றுலா சென்றால் தங்குவதற்காக அல்லது முதலீடு செய்யும் பொருட்டு பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி வைத்து வருகின்றனர். அந்த வகையில் ரோஹித் ஷர்மாவும் விடுமுறை நாட்களில் லொனாவோவில் உள்ள வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.