மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள்
நடிகை த்ரிஷா தன் செல்ல மகள் இஸ்ஸியுடன் கோவிலுக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜொலித்து வருபவர் தான் நடிகை த்ரிஷா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

தற்போது பல சர்ச்சைகள் த்ரிஷாவை சுற்றி வலம் வந்தாலும் எதையும் கண்டுக்கொள்ளாமல் தன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றார்.
த்ரிஷாவின் ரசிகர்களுக்கு தெரியும் இவர் ஒரு நாய் பிரியை. வளர்ப்பு நாயை செல்லப்பிராணியாக மாத்திரம் பார்க்காமல் பெற்ற பிள்ளையை போல் பராமரித்து வருவகின்றார் த்ரிஷா.

ஏற்கனவே த்ரிஷா பாசமாக வளர்த்து வந்த Zorro எனும் நாய்குட்டி உயிரிழந்த போது கூட த்ரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டார்.

அதில் அவர் குறிப்பிடுகையில் என் மகன் இறந்துவிட்டான் என பதிவிட்டார். 12 ஆண்டுகளாக தன்னுடைய Zorro இருந்துள்ளதாகவும் அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.

Zorro வின் இறப்புக்கு பின்னர் தான் இஸ்ஸியை வாங்கி வளர்த்து வருகின்றார்.
இந்நிலையில், அவரின் மகளாக நினைக்கும் இஸ்ஸியுடன் கோவிலுக்கு சென்று த்ரிஷா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |