மாடர்ன் உடையில் 47 வயதில் ஜோதிகா வெளியிட்ட புகைப்படம்
நடிகை ஜோதிகா மாடர்ன் உடையணிந்து 20 வயது பெண் போன்று ஸ்டைலாக மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக இருக்கும் சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் கொண்டவர்கள். இவர்கள் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், தற்போது ஜோதிகா மும்பையில் வசித்து வருகின்றார்.
நீண்ட நாட்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார். அதன் பின்பு நல்ல கதைகளாக தெரிவு செய்து நடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.

அதாவது குடும்ப கதையாகவும், கதாநாயகிக்கு முன்னுரிமை வழங்கும் கதையாக தெரிவு செய்து நடித்து வரும் நிலையில், பிள்ளைகளின் படிப்பிற்காக மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார்.
மாடர்ன் உடையில் ஜோதிகா
படங்களில் நடிப்பதை தாண்டி கணவர் சூர்யாவுடன் தயாரிப்பு வேலையிலும் ஈடுபட்டு வரும் இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் கருப்பு நிற மாடர்ன் உடையணிந்து கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
47 வயதாகும் ஜோதிகா தற்போது இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், மகளின் வயதையே ஓவர்டேக் செய்துவிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |