300 வகையான நோய்களை அடித்து விரட்டும் முருங்கைக்கீரை சாதம்! ஓட்டல் சுவையில் செய்வது எப்படி?
300 வகையான நோய்கள் வராமல் தடுக்கும் மருத்துவம் கொண்ட உணவு தான் முருங்கைக்கீரை.
இதனை அச்சம் இன்றி தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இன்று முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - ஒரு கப்
- துவரம்பருப்பு - கால் கப்
- முருங்கை கீரை - அரை கப்
- பெரிய வெங்காயம் - 1
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
- பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
- பச்சரிசி - 2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 4
- கொப்பரை தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தாளிக்க - கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 3 பல், காய்ந்த மிளகாய் - 1, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை
அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவுங்கள். உப்பும், மூன்றே முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக்கொள்ளவும். முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். பூண்டுப்பல்லை நசுக்கி வையுங்கள்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து கீரை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும். கீரை நன்றாக வெந்ததும் அதில் சாதத்தில் சேருங்கள்.
கடைசியாக அதில் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.
சூப்பரான முருங்கைக்கீரை சாதம் ரெடி.