அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்திய பேட்டியொன்றில் அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதுடன் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
நடிகை ராஷ்மிகா
ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள். விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் சமீபத்தில் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

திருமணத்தின் பின்னரும் ராஷ்மிகா சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றி அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
"உள்ளம் அழகானால் உடலும் அழகாகும். நாம் விதவிதமான ஆடைகளையோ அல்லது அழகு சாதனப் பொருட்களையோ பயன்படுத்தினாலும், நமது ஆழ்மனது தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் உண்மையாக அழகாகத் தெரிவோம்.

எனவே, முடிந்தவரை மற்றவர்களுக்கு நல்லது செய்து வாழ்வோம். அதுவே நமது காலத்திற்குப் பிறகும் நம்மைப் பற்றிப் பேச வைக்கும்."என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.குறித்த கருத்து தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |