நடிப்பில் பட்டையை கிளப்பும் விஜய் பட நடிகை! தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
தென்னிந்திய மொழிகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள ராஷ்மிகா மந்தனா அழகு சாதன நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே படத்தில் உச்சம் தொட்ட நடிகை
தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் ராஷ்மிகா மந்தனா.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
அதேபோல இந்தியில் அமிதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'குட்பை' படத்திலும்,
சித்தார்த் மல்ஹோத்ராவுடன் 'மிஷன் மஞ்சு', துல்கர் சல்மான் நடிக்கும் 'சீதா ராமம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
புதிய தொழில்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கு ஏற்ப, ராஷ்மிகா தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை அழகு சாதன நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறாராம்.
அத்துடன் அந்த நிறுவனத்தின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட இருக்கிறாராம்.
முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலரும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ஹொட்டல்கள், திருமண மண்டபங்கள், அழகு சாதன நிறுவனங்கள் உட்பட பல வழிகளில் முதலீடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.