இலங்கையில் கணவருடன் ஊர் சுற்றும் நடிகை ரம்பா- புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
இலங்கையில் கணவருடன் ஊர் சுற்றும் நடிகை ரம்பாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.
இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக 14 வருடங்கள் சினிமாவிற்குள் வராமல் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் எந்த விதமான நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் தலைகாட்டாத ரம்பா தற்போது சின்னத்திரையில் ரீ- என்றி கொடுத்துள்ளார்.
ஊர் சுற்றும் படங்கள்
இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கணவருடன் இலங்கை வந்த ரம்பா, இரவு நேரத்தில் ஆட்டோவில் ஊர் சுற்றும் காணொளியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா இவ்வளவு எளிமையாக இலங்கையில் ஊர் சுற்றி, மகிழ்ச்சியை வெளிபடுத்திய காட்சிகள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இந்த படங்களுக்கு லைக்குக்களும், கருத்துக்களும் குவிந்து வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |