Ethirneechal: திரும்பி வந்த மகள் ஐஸ்வர்யா... காலில் விழுந்து கதறிய ரேணுகா
எதிர்நீச்சல் சீரியலில் ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்துள்ள நிலையில், ரேணுகா அவரை கோபத்தில் அடித்துவிட்டு, பின்பு மன்னிப்பு கேட்டுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
குடும்பத்தில் தங்களது முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பினாலும், மிகவும் உறுதியாகவே பெண்கள் இருந்து வருகின்றனர்.
குறித்த சீரியல் தற்போதும் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கின்றது. சிறையில் இருக்கும் குணசேகரனின் சொத்தை கையில் வைத்துக் கொண்டு கதிர் பல திருட்டு வேலைகளை செய்து வருகின்றார்.
பள்ளிக்கு சென்ற ஐஸ்வர்யா காணாமல் போன நிலையில், தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். மகள் கூறிய பதிலைக் கேட்ட ரேணுகா அவரை கோபத்தில் அடித்துள்ளார்.
பின்பு அவரிடம் அடித்ததற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். வழக்கம் போல் மாமியாராக தனது வேலையைக் காட்டி வருவதுடன், ஜனனியை வீட்டைவிட்டு வெளியேறவும் கூறுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |