துள்ளிக்குதித்த பிரியங்காவை கண்ணீர் விட வைத்த பிரபல ரிவி! நடந்தது என்ன?
தொகுப்பாளினி பிரியங்கா விடுமுறைக்கு வெளிநாடு சென்று காணொளி வெளியிட்டு வரும் நிலையில், தற்போது பிபி ஜோடி நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பிரபல ரிவி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு நெட்டிசன்களின் ட்ரோலில் சிக்கிய பிரியங்கா தற்போது மீண்டும் தனது தொகுப்பாளர் வேலையை செய்து வருகின்றார்.
தனது சுட்டித்தனமான பேச்சினாலும், செய்கையினாலும் அனைவரது மனதில் இடம்பெற்ற இவர் திருமண வாழ்க்கை குறித்த தகவல் தெரியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.
திருமண வாழ்க்கை குறித்த ரசிகர்களின் கேள்விக்கும் பிரியங்கா எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருந்து வருகின்றார்.
பிபி ஜோடியில் கண்ணீர் சிந்திய பிரியங்கா
பிக்பாஸ் சீசன் 5ல் டைட்டில் வின்னரான ராஜுவுடன் பிபி ஜோடியில் தொகுப்பாளினியாக கலக்கிவரும் பிரியங்காவிற்கு பிரபல ரிவி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஒட்டுமொத்த மக்களையும் கொள்ளை கொண்ட பிரியங்கா தொகுப்பாளினியாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதனை பிரபல ரிவி கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
இதில் பிரியங்கா கடந்து வந்த பாதையினை குறும்படமாக போட்டதுடன், பிபி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களையும் வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து கண்ணீர் சிந்த வைத்துள்ள காட்சி தற்போது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.