தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட பதிவு! கணவருடன் விவாகரத்தா? ரசிகர்களின் கேள்வி

Manchu
Report this article
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்டுள்ள புதிய பதிவினை அவதானித்த ரசிகர்கள் கணவர் குறித்த கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
தொகுப்பாளினி பிரியங்கா
நடிகர் நடிகைகளை விட தொகுப்பாளினிகளுக்கு தற்போது அதிகமாகவே ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்கா தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில், தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
திருமணம்
இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் போது அதே நிகழ்ச்சியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த பிரியங்கா, கடந்த சில வருடங்களாக கணவரைப் பற்றி ஒரு பதிவை கூட போடவில்லை.
அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நிகழ்ச்சியிலும், பிரீஸ் டாஸ்கிலும் கூட கணவர் குறித்த பேச்சை பேசவில்லை.
ரசிகர்கள் கேள்வி
இதையடுத்து பிரியங்கா அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே அவரைப் பற்றி பேச மறுப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது.
இதுகுறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் பிரியங்கா அதற்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு தன் உலகமே என்னுடைய அம்மா, தம்பி தான் என்று சமீபத்தில் ஒரு பதிவினையும் பகிர்ந்துள்ளார்.
இதற்கு இணையத்தில் சிலர் கணவர் பற்றிய கேள்விகளை கேட்டு வருகிறார்கள். உண்மையில் உங்களுக்கும் பிரவீன் குமாருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டு வருகின்றனர்.