100 கோடி ஜீவனாம்சம் கொடுத்த பிரபுதேவா- அவ்வளவு எதுக்கு? வாயை பிளந்த வழக்கறிஞர்
நடிகர் பிரபுதேவா முதல் மனைவியை விவாகரத்து செய்யும் பொழுது அவருக்கு கொடுத்த ஜீவனாம்சம் பற்றிய விவரங்களை குட்டி பத்மினி ஓபனாக பகிர்ந்துள்ளார்.
பிரபுதேவா
தமிழ் சினிமாவின் மூத்த நடன இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட சுந்தரம் மாஸ்டருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் நடிகரும் நடன கலைஞருமான பிரபுதேவா.
இவர், அவருடைய சகோதரர்கள் மற்றும் அப்பாவை போன்று சினிமாத்துறையில் பிரபலமாக இருந்தார். பிரபுதேவா ஆரம்ப காலங்களில் கதாநாயகராக பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம்
“உன்னாலே உன்னாலே”, “எங்கேயும் காதல்” உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பில் கலக்கிக்கொண்டிருந்த பிரபுதேவா, திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதன்படி, தெலுங்கில் சித்தார்த், திரிஷா உள்ளிட்டோரை வைத்து திரைப்படம் இயக்கினார். அதே சமயம், தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி படம் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் பலத்த வரவேற்பை கொடுத்தது.
இதனை தொடர்ந்து, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட், ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்களை இயக்கி, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தார்.
காதல் திருமணம்
இந்த நிலையில், பிரபுதேவாவுக்கு திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. பிரபுதேவா அவருடைய நடன க்ரூப்பில் இணைந்து பணியாற்றிய ரமலத் என்பவரை காதலி திருமணம் செய்து கொண்டார்.
ரமலத் இஸ்லாமியர் என்பதால் முதலில் பிரபுதேவாவின் குடும்பத்தில் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு எழுந்தது. அதன் பின்னர், பிரபுதேவாவுக்காக ரமலத் இஸ்லாமிய மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறி லதா என்று பெயரை மாற்றிக்கொண்டார்.
அவர்களது திருமணத்தை அடுத்து அவர்களுக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒரு மகன் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
100 கோடி ரூபாய் வாங்கினாரா?
இப்படியொரு சமயத்தில் தான் பிரவுதேவாவுக்கும் வில்லு பட நாயகி நயன்தாராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதல், திருமணமாக மாறியது. இந்த சர்ச்சை வெள்ளத்திரையில் பரபரப்பாக பேசப்பட்ட வேளையில் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் அவருக்கு ஜீவனாம்சமாக பிரபுதேவா 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
[
இது குறித்து நடிகை குட்டி பத்மினி பேசும் பொழுது, “ பிரபுதேவா அவருடைய முதல் மனைவியை பிரியும் பொழுது 100 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுத்தார். தமிழ் நாட்டில் யாருக்கும் இப்படியொரு செட்டில்மென்ட் கிடைத்திருக்காது என வழக்கறிஞரும் கூறினார். ஆனால் அதனை பிரபுதேவா விருப்பத்துடன் தான் கொடுத்தார்...” என கூறினார்.
இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள், “ அவ்வளவு வாங்கினாரா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
