potato masiyal: நாவூரும் சுவையில் உருளைக்கிழங்கு மசியல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாக அசைவ பிரியர்களும் விரும்பி சாப்பிடும் வைச உணவுகளின் பட்டியலில் உருளைக்கிழங்கு நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்துவிடும்.
உருளைக்கிழங்கை பல்வேறு வகைகளில் சுவையாக சமைக்கக்கூடியதாக இருப்பதே இதன் சிறப்பம்சமாகும். இது சுவையானது மட்டுமன்றி இதில் வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுவதால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கில் சற்று வித்தியாகமாக எளிமையாக முறையில் அசத்தல் சுவையில் உருளைக்கிழங்கு மசியல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4
தக்காளி - 2 - சீரகம்
½ தே.கரண்டி
வெந்தயம் - ¼ தே.கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறியது(ஒரு இன்ச் அளவு)
பூண்டு - 12 அல்லது 15 பல்
மஞ்சள் தூள் - ¼ தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
சீரகத்தூள் - 1 தே.கரண்டி
தனியா தூள் - 2 தே.கரண்டி
பெருங்காய தூள் - ¼ தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதவில் உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீரில் அலசி தோல் சீவி நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து, பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதுபோல் இஞ்சியையும் சுத்தம் செய்து தோல் சீவி நறுக்கி கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய இஞ்சி மற்றும் தோல் உரித்த பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். பச்சை மிளகாயை உரலில் சேர்த்து இடித்தோ அல்லது மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு நன்றாக பழுத்த இரண்டு தக்காளியை எடுத்து ஒன்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். இன்னொன்றை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விட்டு், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் இடித்து வைத்த பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அதில் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனுடன் நறுக்கிய தக்காளி நன்கு மசிந்து வரும் வரை வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மல்லித்தூள், சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி நன்கு வதக்கவும். - பின் அதனுடன் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
பின்னர் குக்கரை மூடி வைத்து 4 விசில் வரையில் வேகவிட்டு, விசில் அடங்கியதும் குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து கரம் மசாலா மற்றும் பெருங்காய தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, இறுதியில் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் அவ்வளவு தான் சுவையில் உருளைக்கிழங்கு மசியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |