விபத்திற்கு பின்னர் விமான பயணத்தை நினைத்தாலே பயமா இருக்கா? சமாளிக்க எளிய வழிகள்!
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே புதிதாக எந்தவொரு விடயத்தையும் முயற்சிக்கும் போது ஒரு இனம் புரியாத பயம் மனதில் எழுவது இயல்பு தான்.
அதனை ஆங்கிலத்தில் ஆன்சைட்டி என குறிப்பிடுவார்கள். அதில் முக்கியமாக ஒன்று தான் ‘பிளைட் ஆன்சைட்டி’ சிலருக்கு விமான பயணத்தை நினைத்தாலே மனதில் ஒருவிதமான பயம் தொற்றிக்கொள்ளும்.
விமான பயணத்தின்போது ஏற்படும் பதட்டம் என்பது புதிதான ஒன்று கிடையாது. என்றாலும் தற்போது அகமதாபாத்தில் நடந்த உலக மக்களையே துயரில் ஆழ்த்திய விமான விபத்துக்கு பின்னர் இந்த பிளைட் ஆன்சைட்டி என்பது மக்களிடையே வெகுவாக அதிகரித்துவிட்டது.
குறித்த விமான விபத்து பற்றிய செய்திகளையே கேட்டும், பார்த்தும் பலரும் மனஅழுத்தில் இருக்கின்றார்கள்.
அதுமட்டுமன்றி விமானத்தில் அடிக்கடி பயணம் செய்து பழக்கப்பட்டவர்களுக்கும் கூட இந்த விபத்தானது பிளைட் ஆன்சைட்டியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிரு்நது வெளிவருதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பில் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பிளைட் ஆன்சைட்டி என்றால் என்ன?
ஆன்சைட்டி என்பது விமானத்தைப் பற்றியது மட்டும் கிடையாது. அது நமக்குள் ஏற்படும் வலுவிழந்த ஒரு உணர்வை குறிக்கும் இந்த பயம் எதைப்பற்றியதானவும் இருக்கலாம்.
குறிப்பாக பிளைட் ஆன்சைட்டி என்பது தரையில் இருந்து 35,000 அடி உயரத்தில் முன்பின் தெரியாத விமானிகளிடம் விலைமதிக்க முடியாத உங்கள் உயிரை ஒப்படைத்து விமானத்தில் பறக்கும் போது ஏற்படும் அச்சத்தை குறிக்கின்றது.இந்த சூழ்நிலையில் பயம் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
இந்த பயத்தை வெளிப்படுத்த பலரும் பயத்தை முகத்தில் காட்டுவது கிடையாது, சத்தம் போட்டு கூச்சலிடுவதும் கிடையாது. என்றாலும் அவர்ளின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். மறுநாள் விமான பயணம் என்றால், முதல் நாள் இரவு தூங்க முடியாமல் படுக்கையில் புரண்டு புரண்டு இருப்பவர்கள் ஏறாளம்.
பயத்தில் இருந்து விடுபட...
இந்த பயதில் இருந்து வெளிவருவதற்கு உங்களுடைய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த வேண்டியது அவசியம்.
இதற்கு சிறந்த தெரிவாக மூச்சு பயிற்சியை செய்யலாம். இதற்கு 4 எண்ணிக்கையில் மூச்சை பொறுமையாக உள்ளிழுத்து, 4 எண்ணிக்கைக்கு அதனை அப்படியே வைத்திருந்து, பிறகு 6 எண்ணிக்கைக்கு மூச்சை பொறுமையாக வெளியேற்றுவதன் மூலம் பயத்தில் இருந்து விடுபட முடியும்.
அல்லது இசை கேட்பது, பாட்காஸ்ட் கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது அல்லது திரைப்படங்களை பார்ப்பது என உங்களுக்கு மிகவும் பிடித்த, நீங்கள் மெய்மறந்து ரசிக்கும் ஏதாவது ஒரு விடயத்தில் கவனம் செலுத்துவது நல்ல தீர்வாக இருக்கும்.
பயம் அதிகமாக இருக்கும் போது, காஃபைன் மற்றும் மதுபானத்தை தவிர்க்க வேண்டியது அவசியம் இந்த இரண்டுமே பதட்டத்தை மேலும் மோசமாக்கும். எனவே எப்போதும் தண்ணீர் அல்லது மூலிகை தேனீரை பருகுவது அமைதியளிக்கும்.
கிரவுண்டிங் டெக்னிகை கையாளலாம். அதாவது நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கால்களை தரையில் அழுத்தி வைத்து, கைகளை இதயத்தின் மீது வைக்கும் போது ஒருவித அமைதி உணர்வு தானாக ஏற்படும். உடலின் எடையின் மீது கவனம் செலுத்துவது உங்களுடைய நரம்பு அமைப்புடன் நேரடியாக தொடர்பு கொள்வாதால், அச்ச உணர்வு நீங்கும்.
இவை அனைத்தையும் மீறி பதட்டமான நிலை இருக்கிறது என்றால், அங்குள்ள விமான பணிப்பெண்களிடம் நீங்கள் தெரிவித்து, அவர்களுடைய உதவியை பெறலாம்.
அப்படியும் பதட்டம் தீவிரமானதாக இருந்தால் நிச்சயமாக குறுகிய கால மருந்துகள் அல்லது வேறு விதமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |