தந்தைக்கு திடீரென வந்த மகளின் அந்தரங்க காணொளி: பின்பு நடந்த துயரம்! அதிர்ந்து போன பொலிசார்
குஜராத்தில் ஆன்லைன் வகுப்பு கவனிப்பதாக கூறி 15 வயது சிறுமி நிர்வாணமாக காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலக்கட்டம் என்பதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பள்ளிகள் ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஒரு சில குழந்தைகள் இந்த மொபைல் போன் மூலமாக தவறான பாதைக்கு செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் பெற்றோருக்கு தெரியாமல் விளையாடுவது, பணத்தினை இழப்பது, ஆபாச படம் பார்ப்பது என பல பிரச்சினைகளில் குழந்தைகள் சிக்கிக் கொள்கின்றனர்.
சமீபத்தில் ஒரு பள்ளி மாணவி, தன்னை நிர்வாணமாக படம்பிடித்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ள வந்துள்ள சம்பவத்தால் அவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள ஒரு துயரச் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக பெற்றோர்கள் மொபைல் போன் வாங்கிக் கொடுத்த நிலையில், திடீரென பெண்ணின் அந்தரங்க காணொளி இணையத்தில் வருவதாக அக்கம்பக்கத்தினர் கூறியதையடுத்து, உறவினர் ஒருவர் அக்காட்சியினை தந்தைக்கே அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அதிர்ச்சியடைந்த தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்பு காவல்துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
குறித்த 15 வயது சிறுமி தனி அறையில் ஆன்லைன் வகுப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு வலைத்தளம் தோன்றியது, தான் அதைத் திறந்து பார்த்தபோது அதில் அனைத்துவகை நிர்வாண வீடியோக்களும், படங்களும் இருந்தன.
அவைகளை பார்க்கத் தொடங்கியதால் ஆர்வம் அதிகமாகவே, அதிலிருந்து சிலர் தன்னிடம் சாட் செய்து பேச ஆரம்பித்துள்ளனர். மேலும் அந்த தளத்திலிருந்து சில பெண்களும் இவரிடம் பேசி நிர்வாண காட்சியினை எடுத்து அனுப்பக் கோரியுள்ளனர்.
ஆரம்பத்தில் தயங்கிய மாணவி பின்பு காணொளியினை அனுப்பி வைக்க குறித்த காணொளிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து அனுப்பியதுடன், தனக்கு தெரிந்த பெண்களையும் இதில் சேர்த்துள்ளார்.
தனி அறையில் ஆன் லைன் வகுப்பில் ஈடுபடும் பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் அடிக்கடி பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளோம், என்ற அந்த பெண்ணின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
மகளின் ஆபாச படம் குறித்து 181 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்ததாகவும், பின்னர் இணையதளத்திலிருந்து அந்த மாணவியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளர். இந்நிலையில் சைபர் கிரைம் பொலிசார் மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.