ராஜா ராணி சீரியல் நடிகையின் குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை!
பிரபல சீரியல் நடிகை தனது புகைப்படங்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள் இணையதளங்களில் ஆபாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
ராஜா ராணி சீரியல் நடிகை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்து வருபவர் பிரவீனா நாயர். இவர் கேரளாவைச் சேர்ந்தவர்.
இவர் 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். களியுஞ்சல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பல மலையாள படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்கள்
தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி, லாபம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
தமிழ், மலையாளம் சீரியல்களிலும் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார் பிரிவீனா. மேலும், மகாராணி, ஆதி பராசக்தி, பிரியமானவள், மகராஷி, ராஜா ராணி 2, இனியா உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் ஒரு டப்பிங் கலைஞராவார். பல மலையாள படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.
ஆபாசமான புகைப்படங்கள்
இந்நிலையில் தற்போது பிரவீனா மற்றும் அவரது மகள் புகைப்படங்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து கேரளாவில் மகளுடன் சென்று சைபர் கிரைம் பொலிஸில் பிரவீனா புகார் அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் மீது ஏற்கனவே நான் புகார் அளித்ததால் அவர் என்னை பழிவாங்கும் நோக்கோடு எனது புகைப்படம் மற்றும் மகள், அம்மா, சகோதரி ஆகியோரின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வருகிறார்.
எனது பெயரில் சுமார் 100 போலி கணக்குகள் தொடங்கி ஆபாச படங்களை வெளியிடுகிறார். இப்படி ஒரு வக்கிரபுத்தியோடு யாரும் இருக்க முடியாது'' என்றார்.
பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிற நிலையில் இவருக்கு ஆதரவாக சிலர் பேசி வருகின்றாரகள்.
