Singappenne: நிச்சயத்தை நிறுத்த நினைக்கும் யாழினி - உண்மையை அறிந்த மகேஷ்
சிங்கப்பெண்யே சீரியலில் துளசியின் சதியால் அன்புவை திருமணம் செய்யும் எண்ணத்தை யாழினி கண்டுபிடிக்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர்.
இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார். இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.
தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருந்திருந்தும் மகேஷ்க்கு உண்மை தெரியாது.
துளசியையும் அனந்தியையும் பிரிக்கும் யாழினி
இந்த நிலையில், அன்புக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முயற்சி செய்த அவருடைய அம்மாவின் பிடிவாதம் பலிக்க துளசி ஏதேதோ சூழ்ச்சிகள் செய்து அதை தன்வயப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் துளசியின் சதி எப்படியோ யாழினிக்கு தெரிந்துவிட்டது. இதனால் ஆனந்தியிடம் யாழினி துளசியை அன்பு திருமணம் செய்ய கூடாது என்று பேசுகிறார்.
இன்னுமொரு பக்கம் அன்புவிற்கும் ஆனந்திக்கும் தான் நிச்சயதார்த்தம் என நினைத்த மகேஷ் உண்மை அறியாமல் அதை எல்லோரிடமும் அறிவிக்கபோகிறார். இதில் அடுத்து நடக்கவிருக்கும் விறுவிறுப்பான கட்டத்தை அனைவரும் காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
