இரட்டை குழந்தைகள் என்று முன்பே தெரியும்! வாடகை தாய் உடைத்த அடுக்கடுக்கான உண்மைகள்

Nayanthara Vignesh Shivan
By Manchu Oct 13, 2022 11:30 AM GMT
Report

சினிமா திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் விடயம் என்னவெனில் நயன்தாரா விக்கியின் இரட்டை குழந்தைகள் தான்.

நடிகை நயன்தாரா விக்கி ஜோடி

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. நேற்று அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

இரட்டை குழந்தைகள் என்று முன்பே தெரியும்! வாடகை தாய் உடைத்த அடுக்கடுக்கான உண்மைகள் | Nayathara Surrogacy Experience Women Open Talk

வாடகைத் தாய்

இவர்களின் பிரச்சினை பூதாகரமாக வெடித்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்று்ககொடுத்த பெண் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

சென்னையை சேர்த்த குறித்த பெண்ணிடம் பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. குறித்த பேட்டியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

தனது குடும்பத்தில் பணக்கஷ்டம் அதிகமாக இருந்த நிலையில், கடன்காரர்கள் வீட்டில் வந்து சத்தம் போட்டதால், இதனை அவதானித்த செவிலியர் ஒருவர் கருமுட்டைதானம் கொடுத்துல், கருவை சுமக்கும் வாடகை தாய் இம்மாதிரியான இடத்திற்கு பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.


அங்கு சென்று வந்த பின்பு குடும்பத்தினரிடம் எடுத்துக்கூறியுள்ளார் இப்பெண். ஆனால் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நிலையில், கடனை அடைக்க வேறு வேலையை செய்து வந்துள்ளார்.

பின்பு அந்த செவிலியர் குறித்த அலுவலகத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்ற போது, அங்கு குழந்தை இல்லாமல் வீட்டில் மாமியார் கொடுமையை அனுபவித்து வரும் பெண் ஒருவரின் கதையை குறித்த பெண் கேட்டுள்ளார்.

அதன் பின்பு குடும்பத்தினரை தனது மகளுக்கு இவ்வாறு குழந்தை இல்லாமல் தவித்தால் நாம் என்ன செய்வோம் என்று எடுத்துக் கூறி சமாதானம் செய்ததுடன், சம்மதமும் பெற்றுள்ளார். பின்பு இதற்கான பல சோதனைகளை செய்து பின்பு வாடகைத் தாயாக மாறியுள்ளார்.

இரட்டை குழந்தைகள் என்று முன்பே தெரியும்! வாடகை தாய் உடைத்த அடுக்கடுக்கான உண்மைகள் | Nayathara Surrogacy Experience Women Open Talk

கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?

முதலில் மருத்துவர் மற்றும் அந்த அலுவலகத்தில் ஆபிஸர் மூலமாக 8 மாதம் அக்ரிமெண்ட் போடப்படுமாம். முதல் 5 மாதம் வயிறு தெரியாத நிலையில் தான் வசிக்கும் ஏரியாவின் வீட்டில் இருந்த இப்பெண் பின்பு 6 வது மாதத்திலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரணம் குழந்தை வளர வளர வயிறு வெளியே தெரியவந்துவிடும் என்ற காரணத்தினால் இவர் மருத்துவமனையில் இருந்துள்ளார். அங்கு இவருக்கு தேவையான சத்தான சாப்பாடுகள் மருந்துகள் அனைத்தும் தவறாமல் கொடுக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்துள்ளார்.

அதாவது ஒரு ராணி போன்று பார்த்துக் கொள்கின்றனர். சாப்பிட்ட தட்டைக் கூட கீழே குனிந்து கூட வைக்கவிடமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

கர்ப்பப்பையை மட்டும் தானம் கொடுக்கும் எங்களை குறித்த தம்பதியினருக்கு தெரியும்... ஆனால் எங்களுக்கு அவர்கள் யார்? யாருக்கு குழந்தை பெற்றுக் கொடுக்கப்போகிறோம் என்பது தெரியாது.

அக்ரிமெண்டில் போடப்பட்ட 2 லட்சம் பணத்தை ஆரம்பத்தில் கொஞ்சம் கொடுப்பதாகவும், மீதம் மாதம் 3 ஆயிரம் வீதம் கொடுத்துவரும் நிலையில் 8 மாதம் முடியும் போது, மொத்த பணத்தையும் கொடுத்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

நான் மட்டுமின்றி என்னைப் போன்று அங்கு 15 பேர் இருந்ததாகவும், நாங்கள் குழந்தை பெற்றுக் கொடுத்ததும், ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுத்துவிட்டு, அந்த மயக்கம் தெளியும் முன்பே குழந்தையை கொண்டு சென்றுவிடுவார்கள். தாய்பால் கொடுக்க மாட்டோம். ஏனெனில் நாங்கள் கர்ப்பப்பையை மட்டுமே வாடகைக்கு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இரட்டை குழந்தைகள் என்று முன்பே தெரியும்! வாடகை தாய் உடைத்த அடுக்கடுக்கான உண்மைகள் | Nayathara Surrogacy Experience Women Open Talk

தற்போது நிலை என்ன?

அவர்கள் கொடுக்கும் அந்த 2 லட்சம் பணத்தினை வைத்து அப்போது கடனை அடைத்தாலும், தற்போது கஷ்டத்திலே இருப்பதபாக குறித்த பெண் கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறு மற்றவர்களின் கருவை வயிற்றில் சுமப்பதால், அதிகமான வலி மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்பு தங்களது உடலில் பல தொந்தரவுகள் ஏற்படுவதுடன், கடினமான வேலை எதுவும் எங்களால் செய்யமுடியவில்லை.

இதனால் அவசர தேவை என்றால் அந்த அலுவலக ஆபிஸரை சந்தித்து உதவி கேட்போம்... அவர் அவ்வப்போது பண உதவி செய்வார். ஆனால் இந்த பணம் குறித்த தம்பதியினர் கொடுக்கின்றனரா? அல்லது அலுவலகத்திலிருந்து கொடுக்கின்றனரா என்பது எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.


10 ஆண்டுகளுக்கு முன்பு தான் இவ்வாறு பயந்து பயந்து வாடகை தாயாக மாறினோம். ஆனால் தற்போது தாங்கள் இருக்கும் பகுதியிலேயே பல பெண்கள் குடும்ப கஷ்டத்திற்காக இவ்வாறு வாடகை தாயாக செல்லவதாகவும், கருமுட்டை தானம் கொடுக்க செல்வதாகவும் கூறி செல்கின்றார்களாம்.

அதுமட்டுமின்றி தற்போது குறித்த அலுவலகத்தில் இவ்வாறு செல்லும் பெண்களின் உடல் தொந்தரவிற்கு இன்சுரன்ஸ் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், மேலும் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் மாதம் மாதம் ஏதாவது உதவி செய்யும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதே போன்று கருவை உள்ளே செலுத்தும் போதே இரட்டை குழந்தைகள் என்றால் கூறிவிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US