திரையுலகை விட்டு விலக நயன்தாரா முடிவா? காரணம் இதுதானாம்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இரண்டாவது ஹனிமூன் சென்றுள்ள நிலையில், நயன்தாரா திரையுலககை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன் விக்கி
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
பின்பு திருப்பதி கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கிய நிலையில், தொடர்ந்து தாய்லாந்துக்கு சென்று தனது ஹனிமூனைக் கொண்டாடி இந்தியா திரும்பின அவர்கள், தங்களது வேலையை முடித்துவிட்டு மீண்டும் இரண்டாவது ஹனிமூனிற்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

ரொமாண்டிக் புகைப்படங்கள்
இந்நிலையில் இருவரும் ஸ்பெயினில் பார்சிலோனாவில் கொண்டாட்டத்தில் உள்ள நிலையில் தங்களின் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறனர்.
இவர்களின் கொண்டாட்டத்தை அவதானித்த மக்கள், நயன்தாரா வெளியிடும் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது ஹனிமூன் மட்டுமின்றி படப்பிடிப்புக்கு சரியான லொக்கேஷனையும் பார்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
ஐபிஸா என்னும் தீவிற்கு விசிட் அடித்த இவர்கள் அங்கு எடுத்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
ஹனி மூனுக்காகவே பல லட்சங்களை செலவு செய்து வரும் நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக வெளியாகி வருகின்றது.

சினிமாவை விட்டு செல்கின்றாரா?
நடிகை நயன்தாரா திருமணமான நாள் முதல் தற்போது வரை கழுத்தில் உள்ள தாலியை கழற்றாமல் இருக்கின்றார். எந்த மாதிரியான உடை அணிந்தாலும் தாலி தெரியும்படியே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
தன்னுடைய குடும்பத்தினரின் அறிவுறுத்தலின் பெயரில் தாலியை மட்டும் எக்காரணத்திற்காகவும் கழட்டி விடக்கூடாது என்பதில் நயன்தாரா உறுதியாக இருப்பதாகவும், இதற்காகவே சினிமாவை விட்டு விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தன்னுடைய கைவசம் உள்ள படங்களில் கூட தாலியை கழட்டாமல் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், கமிட் ஆன படங்களை நடித்து முடித்து விட்ட பின்னர் விலகுவதாக கூறப்படுகின்றது.