விவாகரத்துக்கு பின்.. சமந்தாவுக்கு பதிலடி கொடுத்த நாகசைதன்யா! அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
விவாகரத்துக்கு பின்னர் தான் ஒரு புதிய மனிதராக உணர்வதாக தெரிவித்துள்ளார் நாக சைதன்யா.
பிரபல பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் காபி வித் கரண்.
இந்த நிகழ்ச்சியில் பல மொழிகளை சேர்ந்த திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் காபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா முன்னாள் கணவரான நாக சைதன்யா பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

காபி வித் கரணில் சமந்தா
கணவர் நாக சைதன்யாவின் பிரிவிற்கு பின்பு, வாழ்க்கை கடினமாக இருந்தது, ஆனால் தற்போது பரவாயில்லை. முன்பைவிட நான் தைரியமானவளாக இருப்பதாகவும், ஜீவனாம்சமாக 250 கோடி வாங்கியதாக செய்தி வெளியானது.
தினமும் காலையில் எழுந்தவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை" என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.
மேலும் கரண் ஜோஹர் கணவர் என்று கூறி கேள்வி கேட்கையில், சமந்தா சற்று முகம் சுழித்துக் கொண்டு முன்னாள் கணவர் என்று பதில் அளித்ததோடு, பிரிவிற்கு பின்பு கடினமான உணர்வு குறித்து கேள்வி எழுப்பிள்ளார்.
அதற்கு சமந்தா, "எங்கள் இருவரையும் ஒரு அறையில் விட்டால், கூர்மையான பொருட்களை மறைக்க வேண்டும் என்பது போன்ற கடினமான உணர்வுகள் உள்ளன" என்றார். தற்போது இவருக்கும் இடையே நல்ல சுமுகமான சூழ்நிலை இல்லை எனவும் ஆனால் எதிர்காலத்தில் மாறலாம் என்றார்.
நாக சைதன்யா பதிலடி
நாக சைதன்யா நடித்துள்ள தேங்க் யூ படம் குறித்து பேட்டியளித்த போது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதில், விவாகரத்துக்குப் பின்னர் எனது வாழ்க்கை நிறையவே மாறியுள்ளது. நான் இப்போதெல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிகம் செலவழிக்கிறேன்.
முன்னர் என்னால் நிறைய மனம் திறந்து பேச முடியாது. இப்போது நான் ஒரு புதிய மனிதனாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்ய நாக சைதன்யாவுக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும், அந்தபெண் சினிமா துறையை சேர்ந்தவராக இருக்க மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.