என்னுடைய கடைசி போட்டி இங்கு தான்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி!
சென்னை அணிக்காக மூன்று சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர் தான் தோனி. இவரின் பங்கு சென்னை அணிக்கு மிகப்பெரிய அஸ்திவாரமாக இருக்கிறது.
தற்போது, வயது காரணமாக பேட்டிங்கில் முன்பு போல் அதிரடி காட்ட முடியவில்லை. எனவே தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்றே பல முன்னாள் வீரர்களும் கூறி வந்தனர்.
இதனிடையே, தற்போது தோனி எப்போது ஓய்வு எடுப்பார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, தோனி ரசிகர் ஒருவர், தோனியிடம் நீங்கள் சுதந்திர தினத்தன்று ஓய்வை அறிவித்தது எதனால்? அதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உள்ளதா என்று கேட்டார்.
மேலும், பேர்வெல் போட்டி எதிலும் பங்கேற்பீர்களா என்ற கேள்வியையும் எழுப்பினார். இதற்கு தோனி பேசுகையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதியை விட சிறந்த நாள் வேறு எதுவும் இருக்க முடியாது.
என்னுடைய கடைசி போட்டியை பொறுத்தமட்டில், நான் சென்னை அணியில் விளையாடுவது நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். சென்னை அணிக்காகவே எனது கடைசி போட்டியும் இருக்கும். அதுவும் சென்னை மண்ணில் எனது ரசிகர்கள் முன்னிலையில் தான் கடைசி போட்டியில் விளையாட வேண்டும் என முடிவு செய்துள்ளேன்,
அது நடக்கும் என நிச்சையமாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதனால், தோனியின் இந்த பேச்சு தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற மாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நற்செய்தியை சென்னை ரசிகர்கள் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
You will still get the opportunity to bid me farewell -Dhoni pic.twitter.com/htmg0dCSOo
— Ritesh Madane (@MadaneRitesh) October 5, 2021