விஜய் முதல்வராவதற்கு எதற்கு அது வேண்டும்? மூன்று முடிச்சு சீரியல் நடிகர் ஓபன் டாக்
சன் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பாகி வரும் 'மூன்று முடிச்சு' சீரியல் நடிகர் நியாஸ், முதல்வர் விஜய் அவர்களின் அரசியல் வருகை மற்றும் அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மூன்று முடிச்சு சீரியல்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மூன்று முடிச்சு சீரியல் TRP-யில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

மூன்று முடிச்சு சீரியலில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் நியாஸ் கான்.
இவர் இதற்கு முன் 'புதுப்புது அர்த்தங்கள்', 'சண்டக்கோழி' ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால், மூன்று முடிச்சு சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

விஜய் குறித்து ஓபன் டாக்
நியாஸ் கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யின் அரசியல் பற்றியும், முக்கியமான ஒரு விஷயம் குறித்தும் பேசியுள்ளார்.
மக்கள் முடிவு தான் மகேசன் முடிவு தான், மகேசன் முடிவு கூட இல்லை மக்கள் முடிவு. அவர்கள் எடுத்து நெஞ்சில் வைத்துவிட்டால் எவன் நினைத்தாலும் வெளியே அனுப்ப முடியாது. அரசியல் என்பது சேவை, அதற்கு எதற்கு அனுபவம் வேண்டும்.உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநிலத்தை Run பண்ணுவது யார், முதல்வர் டாப்பில் இருப்பவர், லீடர். நிர்வாகம் செய்வது IAS அதிகாரிகள் தானே, நிர்வாகத்தை பற்றி அவர்களுக்கு தெரியும்.
எது தேவை எது தேவையில்லை என்பதை முதலமைச்சர் முடிவு எடுப்பார். அதற்கு எதற்கு அனுபவம் வேண்டும், பெரிய அனுபவம் பெற்றவர்கள் என்ன செய்துள்ளார்கள் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |