கணவர் இறந்த பின்பு மீனா வெளியிட்ட முதல் புகைப்படம்! மகளுடன் சிரித்த முகத்துடன் என்ன அழகு?
நடிகை மீனா கணவர் வித்யாசாகர் இறந்த பின்பு மகள் மற்றும் தனது தோழியுடன் இருக்கும் முதல் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, கடந்த 2009-ம் ஆண்டு ஜுலை 12ம் தேதி பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு நைனிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த மாதம் 28-ந் தேதி காலமானார்.
அவரது திடீர் மறைவு மீனாவின் குடும்பத்தினரையும், திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏராளமான சினிமா பிரபலங்கள் வித்யாசாகர் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
திருமணமான 13ம் ஆண்டு திருமண நாளில் கணவர் இல்லாமல் மீனா சோகத்துடன் பதிவு ஒன்றினை பதிவிட்டிருந்தார்.
தோழிகளுடன் மீனா வெளியிட்ட புகைப்படம்
வித்யாசாகர் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், கணவர் இழப்பிலிருந்து மெதுவாக மீண்டு வரும் மீனா மற்றும் அவரது மகள் நைனிகா ஆகியோரை, அவரது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான சங்கவி, சங்கீதா, ரம்பா ஆகியோர் சந்தித்துள்ளனர்.
ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் வந்து மீனாவை சந்தித்த புகைப்படங்களை, அவரே வெளியிட்டுள்ளார்.
கணவர் இறந்த பின்னர் முதல் முறையாக இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து, அவரை சந்திப்பது மகிழ்ச்சி என ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.