மாகாபா வெளியிட்ட புகைப்படம்: எலும்பு முறிவைப் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் கையில் கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்..
மாகாபா ஆனந்த் பிரபல ரிவியில் சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். தற்போது சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் அவரது கையின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இவர் கையில் கட்டுடன் வந்ததை அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக quarantineல் இருப்பதால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வர முடியாத காரணத்தினால், மாகாபா கையில் அடிபட்ட நிலையிலும் ஷோவுக்கு வந்திருந்ததோடு, இவருடன் தீனாவும் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் மாகாபா அவரது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து, எக்ஸ்ரே புகைப்படத்தினை வெளியிட்டு "Thumps up taste the thunder" என குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் விரையில் குணமாக வேண்டும் என பிராத்திப்பதாக கூறி வருகின்றனர். மேலும் பல பிரபலங்களும் கூட அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர். "Get wellll sooon" என டிடி பதிவிட்டு உள்ளார்.