ஒரே வாரத்தில் உடலை மூடும் அளவில் கூந்தல் வேண்டுமா? கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்
பொதுவாக, கேரளா பெண்களின் தலைமுடி என்பது அழகு, ஆரோக்கியம், மற்றும் இயற்கை பராமரிப்பின் சிறந்த உதாரணம்.
அவர்கள் தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், மிருதுவாகவும், கம்பளிபோல் கருப்பாகவும் இருப்பது, அவர்களின் இயற்கை அழகுக்கு கூடுதல் சிறப்பை தருகிறது.
ஒரு பெண்ணின் அழகை பிரதிபலிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி அழகுதான். ஆனால் தற்போது, பலருக்கும் பொதுவான பிரச்சனையாக இருப்பது தலைமுடி உதிர்வு, வளர்ச்சியில் குறைவு, மற்றும் பலவீனமாகும் நிலை.
இப்படியான சூழலில், கேரளா பெண்கள் பரம்பரையாக பயன்படுத்தி வரும் மூன்று முக்கிய இயற்கை பொருட்கள் மூலம், தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை எப்படி வழங்கலாம் என்பதைக் கீழே காணலாம்.
இந்த இயற்கை ரகசியங்கள், உங்கள் தலைமுடி மீண்டும் வளரும், வலிமை பெறும்
கேரள பெண்களின் தலைமுடி ரகசியம்
தலைமுடி உதிர்வு இன்று பலருக்கும் பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. ஆனால் வெறும் மூன்று இயற்கை பொருட்கள் இருந்தாலே, 15 நாட்களில் உங்கள் தலைமுடி காடுபோல் வளரும்! அதற்கு தேவையானவை: தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், மற்றும் வெந்தயம் மட்டுமே.
எப்படி தயாரிப்பது?
- வெந்தயத்தை – உங்கள் தலைமுடி அளவிற்கு தேவையான அளவில் எடுத்து, நன்றாக உலர்த்தி பொடியாக அரைக்கவும்.
- ஒரு பௌளில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயும், 3 ஸ்பூன் விளக்கெண்ணையும் சேர்க்கவும்.
- அதில் அரைத்த வெந்தயப் பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- இக் கலவையை நேரடியாக தலைக்கு பூச வேண்டாம். முதலில் நீராவியில் சிறிது சூடாக்கவும்.
- எண்ணெய் கை சுடும் அளவுக்கு வெதுவெதுப்பாக இருக்கும் போது, தலையில் வேர்க்கால்களுக்கு நன்றாக ஊறும்படி தடவவும்.
எப்படி பயன்படுத்துவது?
இதை வாரத்தில் நான்கு முறை தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள். வெறும் 15 நாட்களில், உங்கள் தலைமுடி வளர்ச்சி காடுபோல் இருக்கும்! முடி உதிர்வும் குறையும், புதிய முடி வளர்ச்சி தீவிரமாக தொடங்கும். இது கேரள பெண்கள் குளிக்கும் முன்னர் தலைமுடி வளர்ச்சிக்காக செய்யும் ஒரு ரகசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
