இந்திய அணியின் வெற்றி... ருத்துராஜுக்கு வாய்ப்பு வழங்க மறுத்த ஹர்திக் பாண்டியா - காரணம் என்ன?
இந்திய மற்றும் அயர்லாந்து அணி மோதிய முதல் டி20 போட்டி நேற்று டப்ளின் நகரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ் போட்ட உடனே மழை குறுக்கிட்டதால், இரவு 11.20 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.
மேலும் போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால், இறுதியில் ஹேரி டெக்டர் என்ற வீரர் மட்டும் கடைசி நேரத்தில் 33 பந்துகளில் 64 ரன்களை விளாசி அசத்தினார்.
இந்தியா வெற்றி
இதனால் 12 ஓவர்களில் அந்த அணி 108/4 ரன்களை சேர்த்தது. 111 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங்கே ட்விஸ்ட் இருந்தது. ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு பதிலாக தீபக் ஹூடா - இஷான் கிஷான் ஓப்பனிங் களமிறங்கினர்.
இதனால் ஹூடா 29 பந்துகளில் 47 ரன்களும், இஷான் 11 பந்துகலில் 26 ரன்களையும் குவித்தனர். இதன் பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது பங்கிற்கு 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 12 பந்துகளில் 24 ரன்களை சேர்க்க, இந்திய அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
ருதுராஜ் புறக்கணிப்பு ஏன்
இந்நிலையில், தீபக் ஹூடா தான் இனி தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும், தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பியதால் ருத்துராஜுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவிக்கையில், ருத்துராஜுக்கு தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு போல் ஏற்பட்டுள்ளது, பெரிய ரிஸ்க் எடுத்து அவரை காயத்துடன் பேட்டிங் செய்ய அனுப்ப எங்களுக்கு வாய்ப்பு இருந்தது.
ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை வீரரின் உடல் நலனே எனக்கு முக்கியம். என்ன நடந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்பதால், அவரை பேட்டிங் செய்ய அனுப்பவில்லை. இதில் எங்களுக்கு எவ்வித தலைவலியும் ஏற்படவில்லை.
ருத்துராஜை வைத்து எந்த சான்சும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும், ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு காலில் காயம் ஏற்படுவது இது 3வது முறை. தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் ருத்துராஜ் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை.
ருத்துக்கு பதிலாக திரிபாதியா
தற்போது ருத்துராஜுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய நிச்சயம் 3 வாரங்கள் ஆகலாம். இதனால் ருத்துராஜ் கெய்க்வாட், அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்த விலக அதிக வாய்ப்புள்ளது.
ஒரு வேளை ருத்துராஜ் விலகினால், அவருக்கு பதில் பிளேயிங் லெவனில் ராகுல் திரிபாதி களமிறங்க வாய்ப்பு உள்ளது.