வழுக்கையில் முடி வளர கொத்தமல்லியை இதோட சேர்த்து தடவுங்க! 3 வாரத்திற்குள் அதிசயம் நடக்கும்!
யாருக்கு தான் முடி கொட்டுற பிரச்சினை இல்லை.
இப்படிப்பட்ட மோசமான பிரச்சினையில் இருந்து விடுபட வழியே இல்லையா என்று கேட்டால், அதற்கு நம் முன்னோர்களின் வழி உள்ளது என்பதே பதில்.
அதுவும் கொத்தமல்லி இலையை வைத்தே நம்மால் இழந்த முடியை மீண்டும் பெற முடியும்.

இது எப்படி சாத்தியம் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
இழந்த இடத்தில் முடி வளர கொத்தமல்லி எண்ணெய்யும் சிறந்த மருந்தாக இருக்கும்.
இதை தயாரிக்க தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி 1 கைப்பிடி
- ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் கொத்தமல்லியை அரைத்து கொள்ளவும்.
அதன்பின் இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொண்டு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முடியின் வேரில் தடவி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
அதன்பின் தலைக்கு குளிக்கலாம். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தாலே வழுக்கையில் மீண்டும் முடி வளரும்.