6 அடி உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்கள்.... பிறகு நடந்தது என்ன?
6 அடி உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
6 அடி உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்கள்
தோழிகளுடன் இளம்பெண்கள் 3 பேர் காட்டில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கரடியிடம் அந்த 3 பெண்களும் சிக்கிக்கொள்கின்றனர்.
மெல்ல நடந்து வந்த கரடி, இளம்பெண்ணின் பின்னால் நெருங்கி நின்றது. இரண்டு கால்களில் மனிதர்களை போன்று நின்று கொண்டு, இளம்பெண்ணின் பின்னாலிருந்து அந்த பெண்ணை சற்று நேரம் மோப்பம் பிடித்தது.
ஆனால், இரண்டு தோழிகளும் அமைதியாக நின்று விட்டனர். அதில் ஒருவர் கரடியிடமிருந்து தப்பி சற்று மெல்ல நடந்து சென்றார்.
இந்த இளம்பெண்ணை சுற்றி, சுற்றி பார்த்த அந்த கரடி, பிறகு அவரை இழுத்து தள்ளியது. ஆனாலும், அந்த இளம்பெண் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண்களை அப்படியே விட்டுவிட்டு அந்த கரடி சென்றுவிட்டது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நல்லவேளையாக அந்தப் பெண்கள் அப்படியே நின்று விட்டனர். தப்பியோடவோ அல்லது அந்த கரடியை தாக்கியிருந்தால் ஆபத்தில் முடிந்திருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
How to survive a bear attack… stand still and stay silent ?? pic.twitter.com/0uI9X5cgC9
— OddIy Terrifying (@OTerrifying) March 24, 2023
