கூழுக்கு பெஸ்ட் காம்பினேஷன் இதுதான்.. நெத்திலி கருவாடு தொக்கு.. எப்படி செய்யணும் தெரியுமா ?
அசைவ பிரியவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் மீன் மற்றும் மீனிலிருந்து வரும் கருவாடு.
நெத்திலி கருவாடு:
பலர் இதை தொக்கு செய்தும் சாப்பிடுவார்கள், அல்லது பொரித்தும் சாப்பிடுவார்கள். அது மட்டுமின்றி இது கம்பங்கூழுடன் சேர்த்து சாப்பிடும் ஒரு சைடிஷாக கருதப்படுகிறது
மேலும் கூழ் குடிப்பதன் மூலம் நம் இந்த கோடை வெயிலில் இருந்து நாம் நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம். சிலர் கூழுக்கு பச்சை மிளகாய் வைத்தும், அப்பளம் வைத்தும் சாப்பிடுவது உண்டு.
சிறுதுண்டு கருவாடை வைத்து ஒரு சட்டி நிறைய சாப்பாடை சாப்பிட்டுவிடுவார்கள் கிராமத்து நபர்கள். அந்த அளவிற்கு சுவையில் சுண்டி இழுக்கும் கருவாட்டில், நெத்திலி கருவாடு தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :
நெத்திலி கருவாடு
புளி
பெரிய வெங்காயம்
தக்காளி
வெள்ளை பூண்டு
எண்ணெய்
கடுகு
வெந்தயம்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
மிளகாய் தூள்
உப்பு.

செய்முறை :
நாம் வாங்கிட்டு வந்த நெத்திலி மீனை சுடு தண்ணீரில் நன்கு கழுவி அதை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சிறிது கடுகு வெந்தயம் சேர்த்து அது பொரிந்தவுடன் பூண்டு சேர்க்கவும்.
பின் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு அதுடன் தக்காளி சேர்த்து பின்பு மசாலா பொருள்களான மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின்பு அதில் சிறிது புளி கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின்பு நாம் ஊற வைத்த கருவாட்டை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின்பு இறக்கினால் சுவையான புளிப்பு மற்றும் காரமான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி இதை நாம் தயிர் சாதம் மற்றும் கூழுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |