ஆரோக்கியத்தை அளிக்கும் மிளகு சீரக அடை... எப்படி செய்யனும் தெரியுமா?
உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் மிளகு சீரக அடை எப்படி செய்வது என்று இங்கு கீழே பார்க்கலாம்.
அடை தோசை
பொதுவாகவே காலை டிபன் என்றாலே நாம் அனைவரும் இட்லி, தோசை, சப்பாத்தி மட்டும் தான் சாப்பிட்டிருப்போம்.
ஆனால் நம் முன்னோர்கள் எப்போதும் நல்ல சத்தான உணவுகளை மட்டும் தான் சாப்பிட்டார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்கவும் முடிந்தது.
அந்த வகையில் ஒன்று தான் மிளகு சீரக அடை தோசை. இது அதிக சத்துக்களையும், கால்சியத்தையும் கொண்டுள்ளதால் எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.
இதை நம் உணவில் அன்றாட சேர்ப்பதன் மூலம் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கிறது. அப்படிபட்ட அடையை எப்படி செய்வது என்று இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கப்
கருப்பு உளுந்து - 3/4 கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
நறுக்கிய தேங்காய் துண்டுகள்1/2 கப்
நறுக்கிய கறிவேப்பிலை - 2 ஸ்பூன்
நெய் - அடை சுடுவதற்குத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி அதை 2 முதல் 4 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். ஆனால் உளுந்தம்பருப்பை ஊற வைக்க வேண்டியதில்லை.
மறுபக்கம் ஒரு ஜாரில் கறுப்பு உளுந்து, மிளகு, சீரகம் மற்றும் ஊறவைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மீதமான அரிசியையும் அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நாம் எடுத்து வைத்த கலவையி்ல் நறுக்கிய தேங்காய் துண்டுகள் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு தோசைக்கல்லை சூடாக்கி நாம் கலந்து வைத்த கலவையை நம் கையில் நன்கு தடிமனாக எடுத்து ரொட்டியாக கல்லில் போடவும்.
மிதமான தீயில் நெய் விட்டு சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான மிளகு, சீரக அடை தயார். இதனை சட்னி மற்றும் வெல்லம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |