தோசைக்கு இந்த சட்னியை செய்து பாருங்க! ஆரோக்கியத்தை அள்ளித் தருமாம்
இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி முடக்கத்தான் கீரையில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கீரைகள் எப்பொழுதும் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும். ஒவ்வொரு கீரைக்கும் வெவ்வேறு வகையான தனி சிறப்பு காணப்படுகின்றது.
கால்சியம் சத்து நிறைந்ததுடன், எலும்பு ஆரோக்கியத்திற்கும் சிறந்த கீரையாக இருக்கும் முடக்கத்தான் கீரையில் சட்னி செய்வதைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை - 1 கட்டு
கொத்தமல்லி இலை - ½ கட்டு
தயிர் - ½ கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
தேங்காய் - ½ மூடி
இஞ்சி - 1 டீ ஸ்பூன்
உளுந்து பருப்பு - 2 டீ ஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 அல்லது 6 பல்
புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
நல்லெண்ணெய் - 2 டீ ஸ்பூன்
தாளிக்க
நல்லெண்ணெய் - 2 டீ ஸ்பூன்
கடுகு - ½ டீ ஸ்பூன்
உளுந்து பருப்பு - ½ டீ ஸ்பூன்
கடலைபருப்பு - ½ டீ ஸ்பூன்
வரமிளகாய் - 2
செய்முறை
முடக்கத்தான் கீரை மற்றும் கொத்தமல்லி இலையை மண் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து அலசி கொள்ளவும்.
பூண்டு, சின்ன வெங்காயம் இவற்றினை தோல் உரித்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காயை துருவியும், தக்காளியை காம்பு பகுதி நீக்கி வெட்டி வைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் காய்ந்த பின்பு உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்பு, இதனுடன் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் புளியை சேர்த்து வதக்கிய பின்பு முடக்கத்தான் கீரை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். பின்பு ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்து, மேலே கூறப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு தாளித்து பரிமாறினால் அட்டகாசமான முடக்கத்தான் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |