அசுர வேகத்தில் மணலுக்குள் தன்னை தானே புதைத்துக்கொள்ளும் பாம்பு... எதற்காக தெரியுமா?
சைட்விண்டர் எனும் பாலைவன பகுதிகளில் வாழ்வதற்கு இசைவாக்கமடைந்துள்ளது. இது இரைபிடிப்பதற்காக தன் உடலை தானே மணலில் புதைத்துக்கொண்டு பதுங்கியிருக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
சைட்விண்டர் ராட்டில்ஸ்னேக் என்பது அதிக வேகத்தில் இரையைத் தொடரும் பாம்பு இனமாகும். இது சுமார் 29 கிமீ வேகத்தில் இரையை நோக்கி விரைகிறது.
அது நகரும் விதம் தனித்துவமானது, எனவே அதன் வேகமும் மிகவும் அதிகமாக இருக்கும். சைட்விண்டர்கள் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க தென்மேற்கின் பாலைவனப் பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்த வகை பாம்புகள் அதன் மூக்கின் அருகே அமைந்துள்ள வெப்ப உணர்திறன் குழிகளைப் பயன்படுத்தி, கொறித்துண்ணிகள் மற்றும் சிறிய பறவைகள் போன்ற சூடான இரத்தம் கொண்ட இரையைக் கண்டறிகிறது.
அதன் வீரியமான விஷம் தாக்கப்பட்ட இரையை வினாடிகளிலேயே செயழிழக்கச்செய்கின்றது. இது பெரும்பாலும் மணலில் தன்னைப் புதைக்கிறது, அதன் தலை மற்றும் கண்கள் மட்டுமே தெரியும்.
அப்படி சந்தேகத்திற்கு இடமின்றி இரையை தாக்க பதுங்கியிருக்கும் சைட்விண்டர் பாம்பின் வியப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
