குருவால் உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிகள் - ஜோதிடர் ஷெல்வி கணிப்பு
பராபவ வருடத்தில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

குருப்பெயர்ச்சி
ஜோதிடத்தில் குரு மிக முக்கியமான கிரகமாகும். இவர் ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றிக்கொள்வார். இதன்போது தனது உச்ச ராசியான கடகத்துக்கு வருவார்.
இது எல்லா ராசிகளுக்கும் நன்மைகளை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு இது அதிக நன்மையை கொடுக்கும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
திருக் கணிதப்படி 2.6.2026 அன்று பெயர்ச்சி ஆகிறார். அவரது விசேஷ பார்வைகளான 5,7,9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம்,மகரம், மீனம் ராசிகளில் விழும்.
எனவே இந்த குருப்பெயுர்ச்சி எந்த ராசிகளுக்கு அதிக நன்மை கொடுக்கும் என்பதை ஜோதிடர் ஷெல்வி விபரித்துள்ளார்.

மேஷம்
- மேஷ ராசிக்காரர்களுக்கு எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எதிர்பாரா பயணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த விடயங்கள் நடந்து முடியும். வீட்டில் எல்லாம் சீராக நடக்கும். பணவரவு அதிகமாகும். வாரிசுகளால் பெருமை சேரும். முதலீட்டில் அவசரம் வேண்டாம். அரசுப்பணியில் இருப்போர் அடக்கத்தைக் கையாளவது நல்லது. கலைஞர்கள், படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வாகனப் பழுதினை உடனுக்குடன் சீர் செய்வது நல்லது. தூக்கமின்மை, அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம்.
ரிஷபம்
- திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும் காலம் இது. பணியில் பொறுப்புடன் நடந்தால் பதவி, ஊதிய உயர்வு தாமதமாகினும் கைகூடும். குடும்பத்தில் அமைதிக்காக விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழிலில் நிதானம் நல்ல பலன் தரும். மாணவர்கள் கவனக்குறைவை தவிர்க்க வேண்டும். உடல்நலத்தில் கவனம் தேவை. நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
மிதுனம்
- உழைப்பால் உயர்வு பெறும் காலம் இது. அலுவலகத்தில் கடின உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். பண விஷயங்களில் கவனம் அவசியம். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். தொழில், வர்த்தகத்தில் வளர்ச்சி காணப்படும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி, இடமாற்ற வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்க வேண்டும். உடல்நலத்தில் கவனம் தேவை. மகாலக்ஷ்மி வழிபாடு மகிழ்ச்சி தரும்.
கடகம்
- உயர்வுகள் உறுதியாக கிடைக்கும் காலம் இது. பணியில் திறமைக்கு மதிப்பு அதிகரித்து மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும், உறவுகளில் செல்வாக்கு உயரும். தொழிலில் தொடர்ந்து வளர்ச்சி ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். மாணவர்கள் தவறான நட்புகளை தவிர்க்க வேண்டும். உடல்நலத்தில் கவனம் அவசியம். அனுமன் வழிபாடு ஆனந்தமும் நன்மையும் தரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).