வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிருந்து தப்பிக்க வேண்டுமா? மிளகாய் செய்யும் அற்புதம்
காரம் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பச்சை மிளகாய் தான். அப்படியான பச்சை மிளகாயை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மிக அதிக அளவில் இருப்பதால் நமது உடலில் இயங்கக் கூடிய உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றது.
பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்தும் நம்மை காப்பாற்றுகிறது. இளமையை நீடிக்க வைக்கும் வல்லமையும் இந்த பச்சை மிளகாய்க்கு உண்டு.
பச்சை மிளகாயில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளதால் இதை பயன்படுத்தும் போது மூக்கடைப்பு குணமாவதை நாம் அனுபவ பூர்வமாக உணரலாம்.
எந்தவித கலோரிகளும் இல்லாமல் கிடைப்பதால் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருப்பவர்களும் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவுகிறது.
பக்கவிளைவுகள் என்னென்ன?
பச்சை மிளகாயை சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். அது வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
சிலருக்கு வயிற்று வலி அல்லது வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படும். உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும். எனவே நீங்கள் பச்சை மிளகாயை தவிர்ப்பது நல்லது.
பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. நமது உடலில் இது அதிகமாக இருந்தால் தோல் ஒவ்வாமை ஏற்படும்.