அடிப்பாவி உன்னை அப்பாவினு நினைச்சேனே? அண்ணன் தங்கையிடம் அசிங்கப்பட்ட கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இந்த வாரம் கிராமத்து அண்ணன் தங்கை... நகரத்து அண்ணன் தங்கை என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில பகுதிகள் காணொளியாக வெளியாகியுள்ளது. இந்த வாரம் விவாதமும் இன்றைய இளைஞர்களை சிந்திக்கும்படியாக அமைந்துள்ளது.
நொந்து போன கோபிநாத்
நிகழ்ச்சியில் கோபிநாத், அண்ணன் தங்கை இருவரிடமும், தங்கைக்கு ஆதரவாக பேசினார். ஏற்கனவே வேறொருவரை காதலிக்கிறார் போல தங்கை... கோபிநாத் கூறியதும் தனது அண்ணனிடம் சைகை காட்டியதை அவதானித்த கோபிநாத் அடிப்பாவி உன்னை அப்பாவினு நினைச்சேனே? என்று கூறி சங்கடப்பட்டுள்ளார்.