பக்தியின் உச்சம்.. வாயில் தீ சட்டி ஏந்திய படி பிரார்த்தனை நடத்திய பெண்- வைரல் வீடியோ!
வாயில் தீ சட்டி ஏந்தியப்படி பிரார்த்தனை செய்யும் பெண்ணின் வீடியோக்காட்சி பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது.
வைரல் காட்சி
பொதுவாக சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாவது வழமை.
தற்போது இருக்கும் மீடியாக்களை விட பயனர்கள் விரைவாக செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் விரைவாக பதிவேற்றம் செய்கிறார்கள்.
இதன் மூலமாக வருமானம் பெற்றுக் கொள்ளும் வசதியும் இருப்பதால் மீடியாக்கள் தான் ஒரு செய்தியை கொடுக்க வேண்டும் என்ற தேவை இல்லாமல் போய் விட்டது.
அந்த வகையில் பெண்கள் ஆன்மீகம் என பார்க்கும் போது மிக பக்தியாக இருப்பார்கள். வீட்டில் ஏதாவது பிரச்சினை அல்லது நினைத்த காரியம் சரியாக நடக்காவிட்டால் கடவுளிடம் வேண்டுக் கொள்வார்கள்.
அத்துடன் வேண்டுதல்களையும் வைத்து விடுவார்கள். சில வேண்டுதல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கடவுளுக்காக பண்ணும் போது அது வியப்பாக இருக்கின்றது.
வாயில் தீ சட்டி
இந்த நிலையில் பெண்ணொருவர் வாயில் தீ சட்டி ஏந்தியப்படி பிரார்த்தனை செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதில் அந்த பெண் தீ சட்டி ஏந்தியப்படி நடனம் ஆடுகிறார். கொஞ்சம் தவறினாலும் பெண்ணின் உடம்பு சேதமாகி விடும்.
உயிர் ஆபத்துக்கள் நிறைந்த வேண்டுதல் செய்வதால் கடவுள் நினைத்த காரியங்களை விரைவாக தருகிறார்கள் என அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் இது போன்ற காட்சிகள் 18 வயதிற்கு குறைந்தவர்களை பாதிக்க வாய்ப்பு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
