தமிழனை மணந்த ஜேர்மன் அழகி: மேளதாளத்துடன் நடந்த திருமணம்
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ் பாரம்பரிய முறைப்படி கரம்பிடித்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காதல் திருமணம்
கடல் கடந்து வந்து தனது காதலரை கரம் பிடித்தார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண். இந்த திருமணம் தமிழ் முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சாவூரில் உள்ள பூதலூர் கூடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் விலினா பெர்கன். இவர்கள் இருவரும் ஜெர்மனி நாட்டில் ஐ.டி. கம்பெனியில் 10 வருடங்களாக ஒன்றாகப் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒன்றாக பணிபுரிந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியது. இதன் பின்னர் இரண்டு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவருக்கும் தமிழ் முறைப்படி தஞ்சையில் திருமணம் நடைபெற்றது.
இதில் மணப்பெண் என்ன தான் வெளிநாட்டவர் என்றாலும் பாரம்பரிய முறைப்படி கையில் மருதாணி போட்டுக் கொண்டு பட்டுப்புடவை அணிந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.

நாதஸ்வரம் முழங்க தமிழ் முறைப்படி திருமண நடைபெற்றது. திருமணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், மணமக்கள் மேடையிலிருந்து கீழே இறங்கி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்களிடமும் தங்களது நண்பர்களிடமும் வாழ்த்துகளை பெற்றனர்.
திருமண விழாவில் பங்கேற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழக பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |