Ethirneechal: ரகசியத்தை அறிந்த கரிகாலன்... கடைசியில் அரங்கேறிய சோகம்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியிடம் காணொளி இல்லை என்ற உண்மையை அறிந்த கரிகாலனுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்து வருகின்றது. குணசேகரனையே வீட்டு பெண்கள் அடக்கி வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த குணசேகரன் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது பொங்கி எழுந்து வருகின்றார். தன்னை குறித்த ரகசியம் சக்திக்கு தெரிந்துள்ள நிலையில்,அவரை கொலை செய்வதற்கு ஆள் அனுப்பியுள்ளார்.

மற்றொரு புறம் ஜனனி குணசேகரன் கொடுத்த கெடு முடிவதற்குள் வீடியோ ஆதாரத்தினைக் கைப்பற்ற வேண்டும் என்ற வேலையினை பார்த்து வருகின்றார்.
காணொளி குறித்து பேசிக் கொண்டிருக்கையில், கரிகாலன் ரகசியத்தை தெரிந்து கொண்டு, குணசேகரனிடம் கூறுவதற்காக ஓடி வந்துள்ளார்.
அப்பொழுது தடுமாறி கீழே விழுந்து ஞாபகமறதி ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பெண்கள் அனைவரும் குழப்பத்தில் காணப்படுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |