Ethirneechal: மீண்டும் மாமியார் வேலையைக் காட்டும் விசாலாட்சி... கொளுத்தி போட்ட குணசேகரன்

Manchu
Report this article
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தனது தாய் விசாலாட்சியிடம் மருமகள்களை கவனிக்கும் விதத்தில் கவனிக்குமாறு ஏற்றிவிட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் சமீபத்தில் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி போராடிய நிலையில், தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
தம்பிகளை வைத்து குணசேகரன் வீட்டு மருமகள்களை பிரிக்க நினைக்கும் நிலையில், எழும்பிய தனது தாய் விசாலாட்சியிடம் மாமியாராக நடந்து கொள்ளவும் கொளுத்தி போட்டுள்ளார்.
வீட்டில் உள்ள மருமகள்களில் ஜனனியைத் தவிர மற்ற மூன்று சமையலறையில் இருக்கும் நிலையில், ஜனனி வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்புகின்றார்.
ஆனால் விசாலாட்சி தனது தந்திரத்தினால் வெளியே சென்று மருமகளை தடுத்து நிறுத்துகின்றார். இதனை புரியாத மற்ற மருமகள்கள் யோசனையில் காணப்படுகின்றனர்.
.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
