வெறிக் கொண்டு தேடும் குணசேகரன்.. மயங்கிய நிலையில் தர்ஷன்- காதலி உதவி செய்வாரா?
எப்படியாவது தர்ஷன் திருமணம் நடக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் குணசேகரன் கடைசியில் மகன் திருமணத்திற்காக வீட்டிலுள்ளவர்களை கொலைச் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக கதையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அறிவுக்கரசியின் தங்கையை எப்படியாவது மகனுக்கு திருமணம் செய்து வைத்து வீட்டிலுள்ள பெண்களை வெற்றிப் பெற வேண்டும் என குணசேகரனும் அவருடைய தம்பிகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னுடைய விருப்பத்திற்காக அப்பாவை எதிர்க்க முடியாத தர்ஷன் திருமணத்தை திருத்துவதற்காக வீட்டிலிருந்து தப்பி ஓடி விடுகிறார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் வீட்டிலுள்ளவர்களும், அறிவுக்கரசியின் ஆட்களும் வெறித்தனமாக தர்ஷனை தேடி வருகிறார்கள்.
காதலி உதவிச் செய்வாரா?
இந்த நிலையில், ஊரை விட்டு ஓடி வந்த தர்ஷன் ஒரு இடத்தில் கலைப்புடன் அமர்ந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக தர்ஷனை காதலித்து ஏமாந்த பெண் வருகிறார்.
தர்ஷனின் நிலையை பார்த்து உதவிச் செய்வாரா? என்பது தெரியவில்லை. இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில் வீட்டில் “தன்னுடைய மகன் திருமணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும்.
அதற்கு இடையில் வருபவர்களை சுட்டுத் தள்ளி விடுவேன்..” என குணசேகரன் துப்பாக்கியுடன் வீட்டில் காத்திருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |