தெருத்தெருவாக அலையும் தர்ஷன்.. போட்டு தள்ள முடிவு செய்த அறிவுக்கரசி- சக்தி தடுப்பாரா?
திருமணத்தில் இருந்து தப்பி ஓடிய தர்ஷாவை எப்படியாவது கொலைச் செய்ய வேண்டும் என அறிவுக்கரசி முடிவு செய்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது.
படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது. பல பிரச்சினைகள் வீட்டில் வெடித்து கொண்டிருக்கும் பொழுது குணசேகரன் ஆட்டத்தை அடக்க முடிவு செய்த ஜனனி பொலிஸ் புகார் கொடுத்து குணசேகரனை சிறையில் அடைத்தார்.
அப்போது சிறையில் பழக்கமாகிய அறிவுக்கரசி குடும்பத்துடன் சம்பந்தம் வைத்து கொள்ள வேண்டும் என குணசேகரன் நினைக்கிறார். இதனால் அறிவுக்கரசியின் தங்கைக்கு தர்ஷாவை திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்து, திருமண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன.
போட்டுத்தள்ள முடிவு செய்த அறிவுக்கரசி
இந்த நிலையில், “திருமணம் வேண்டாம்.. கொஞ்சம் நாட்கள் படித்து விட்டு வேலைக்கு செல்லலாம்..” என நினைத்த தர்ஷா, இது குறித்து வீட்டிலுள்ளவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவரை புரிந்து கொள்ளாத குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிகள் தர்ஷாவை அடித்து இனி வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்கிறார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தர்ஷா, கல்லூரிக்கு செல்கிறார். அங்கும் அறிவுக்கரசியின் தங்கை தொந்தரவு செய்கிறார். இப்படி பிரச்சினை அதிகமாக இருக்க தர்ஷா என்ன செய்வது என தெரியாமல் கல்லூரியில் இருந்து தப்பி ஓடுகிறார்.
தொடர்ந்து தர்ஷாவை குடும்பத்தினர் தேடி வரும் வேளையில், இந்த சமயத்தை பயன்படுத்தி அறிவுக்கரசி, தர்ஷாவை போட்டுத்தள்ள ஆள் அனுப்புகிறார். இதற்கெல்லாம் சக்தி தடையாக இருக்கலாம் என நினைத்து, அவரை எப்படியாவது கழட்டி விட்ட பின்னர் வேலையை ஆரம்பிக்கும்படி கூறுகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது தர்ஷாவின் காதலி வீட்டை காட்டுகிறார்கள். சில வேளைகளில் தங்க இடம் இல்லாமல் தர்ஷாவை அவருடைய காதலி வீட்டிற்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஈஸ்வரி மகனை தொலைத்து விட்டு, அவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என ஒரு பக்கம் புலம்பி கொண்டிருக்கிறார்.
வீட்டில் நடக்கும் சதி வேலைகளை தெரிந்து கொள்ளாத சக்தி ஈஸ்வரிக்கு கோல் செய்து, “நான் என்னுடைய மகனை கண்டுபிடிக்கிறேன். தயவு செய்து நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்..” என்கிறார். குணசேகரன் ஒரு பக்கம் துப்பாக்கியுடன் இருக்கிறார்.
இவ்வளவு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியலில் தர்ஷாவின் உயிர் போகுமா? அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதனை பொறுமையாக பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |