Ethirneechal: குணசேகரன் மருமகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.. நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் Likes
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மருமகள் ஆகப்போகும் அன்புக்கரசிக்கு கிடைத்த அங்கீகாரம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருக்கிறார்.
தர்ஷனனின் நிலையை புரிந்து கொண்ட சக்தி மருத்துவர் ஒருவரை அழைத்து தர்ஷனின் மயக்கத்தை தெளிய வைக்கிறார்.
இந்த நிலையில், தற்போது சீரியலில் தர்ஷன் திருமணத்தை மையமாக வைத்து குணசேகரனுக்கும் வீட்டு மருமகள்களும் பலத்த சண்டை போடும் காட்சிகள் சென்றுக் கொண்டிருக்கின்றன.
அங்கீகாரம் கிடைத்த தருணம்
சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அறிவுக்கரசி, எப்படியாவது தன்னுடைய தங்கையான அன்புக்கரசிக்கு தர்ஷனனை திருமணம் செய்து வைத்து விடலாம் என பல சதி வேலைகளை செய்து வருகிறார்.
இப்படி சீரியலில் தர்ஷன் திருமணத்திற்காக குடும்பத்தினர் அடித்துக் கொள்ளும் வேளையில் அன்புக்கரசி கதாபாத்திரத்தில் நடிக்கும் செரின் தாரா விருது வாங்கிய புகைப்படங்களை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், தனக்கு அவ்வளவு ஆதரவுக் கொடுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் அன்புக்கரிசிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |