Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷனுக்கு மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து அறிவுக்கரசி ஆட்டத்தை ஆரம்பித்த நிலையில், ஞானம் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றார். அவரின் நிலைக்கு குணசேகரன் தான் காரணம் என்று வீட்டுப்பெண்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் குறித்த வழக்கு ஜனனி மீது பாய்ந்துள்ள நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். தற்போது ஜாமீனில் வெளிவந்த ஜனனி, சரவெடியாக வெடித்து வருகின்றார்.
இந்நிலையில் தர்ஷனை தனது வழிக்கு கொண்டு வருவதற்கு அன்புவை விட்டு குளிர்பானத்தில் மருந்து கலந்து கொடுத்துள்ளார் அறிவுக்கரசி.
தற்போது ஞானம் ஜாமீனில் வெளிவந்துள்ளது குணசேகரன், அறிவுக்கரசி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியே வந்த ஞானம் யாருக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற கேள்வி எழுந்ததுடன், தர்ஷன் அன்புவிடம் சிக்கிக் கொண்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |