Ethirneechal: கெத்துக்காட்டிய அறிவுக்கரசியை திணறவிட்ட தர்ஷன்! எஸ்கேப் ஆனதால் அதிர்ச்சி
எதிர்நீச்சல் சீரியலில் அன்புக்கரசி மற்றும் அறிவுக்கரசியை ஏமாற்றி விட்டு, தர்ஷன் கல்லூரியிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் முடங்கி இருந்த பெண்கள் தற்போது குணசேகரன் சம்மதத்துடன் ஹோட்டல் தொழிலில் கலக்கி வருகின்றனர்.
தர்ஷனை அறிவுக்கரசியை தனது பார்வையில் வைத்துக் கொள்ள குணசேகரன் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். தர்ஷன் கல்லூரிக்கு செல்வதாக கூறியுள்ள நிலையில், அறிவுக்கரசியும் தனது அடியாட்களுடன் கல்லூரிக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு பாத்ரூம் செல்வதாக கூறி அன்புக்கரசியை வெளியே நிற்க வைத்துவிட்டு சுவர் ஏறி குதித்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதனால் அறிவுக்கரசி உச்சக்கட்ட கோபத்தில் காணப்படுகின்றார். ஈஸ்வரி தர்ஷனை தேடச் சென்ற நிலையில், அவரையும், மற்ற பெண்களையும் குணசேகரன் வெளியே செல்லவிடாமல் தடுத்து வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |