Ethirneechal: ஆதாரத்தை மறைக்க போராடும் அறிவுக்கரசி.. மோப்பம் பிடிக்க ஆரம்பித்த மருமகள்கள்
வீட்டில் நடக்கும் அத்தனை குழப்பத்திற்கும் அறிவுக்கரசியிடம் பதில் இருந்தாலும், ஜனனி துண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்த நிலைக்கு செல்வதற்கு அவருடைய கணவர் குணசேகரன் தான் காரணம் என வீட்டிலுள்ள பெண்கள் கூறுகிறார்கள்.
இதற்கான ஆதாரம் வீட்டில் வந்து அதிகாரமாக உரிமை கொண்டாடும் அறிவுக்கரசியிடம் இருக்கிறது. ஆனால் ஈஸ்வரி கொலை முயற்சி வழக்கில் ஜனனியை சிக்க வைப்பதற்காக வீட்டில் சதி நடந்து கொண்டிருக்கிறது.
பணப்பலத்தை காட்டும் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி இருவரும் புதிதாக அதிகாரியொருவரை கொண்டு வருகிறார்கள். அவர், உண்மையை கண்டுபிடிக்காமல் ஜனனியை எப்படி சிக்க வைக்கலாம் என ஆதாரம் சேகரிக்கிறார்.
புடவையில் மறைக்கப்பட்டிருக்கு ஆதாரம்
இந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரியை எப்படியாவது காப்பாற்றிக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சியில் வீட்டிலுள்ள பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்.
பெண்களின் தவிப்பை ஒரு பெண்ணாக அறிவுக்கரசி புரிந்துகொள்ளாது, தன்னுடைய தங்கையான அன்புக்கரசியை எப்படியாவது தர்ஷனனுக்கு திருமணம் செய்து வைத்து குணசேகரன் வீட்டு சம்பந்தியாகி விட வேண்டும் என நினைக்கிறார். இதனால் குணசேகரன் வீட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் வெடித்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முடிவு அறிவுக்கரசியை புடவைக்குள் இருக்கிறது என்பதை ஜனனி எப்போது கண்டுபிடிப்பார் என சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்.
தொலைபேசியை எடுக்க முயற்சி செய்யும் பொழுது அறிவுக்கரிசி மற்றும் குணசேகரன் முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. இதனை கவனித்த ஜனனி, வீட்டில் தான் முக்கிய ஆதாரம் இருக்கிறது என மற்றவர்களிடம் கூறுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |