வெறும் வயிற்றில் நாவல் பழத்தை சாப்பிட கூடாது...மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார்
நாவல் பழத்தில் அதிக கால்சியம் உள்ளது. தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும்.
இதில் வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.
இதை பகல் நேரத்தில் சாப்பிடலாம். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.
ஏன் நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது?
நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. ஏனெனில் இதன் புளிப்பு சுவை அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
வயிற்று வலி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாவல் பழம் செரிமானத்துக்கு உதவுகிறது.
அதனால் உணவு உண்ட பிறகு அதை எடுத்துகொள்வது தான் நல்லது.
நாவல் பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது?
நாவல் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது. ஏனெனில் இது உடல்நல அபாயங்களை வேண்டி அழைப்பது போன்றது.
நாவல் பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் அது வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டு செய்யலாம்.
இதை சாப்பிட்டு 30 முதல் 40 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது.
நாவல் பழம் சாப்பிட்ட பிறகு மஞ்சள் சேர்த்த உணவு தவிர்க்க வேண்டும்
நாவல் பழம் சாப்பிட்ட உடனே மஞ்சள் சேர்த்த உணவை தவிர்க்க வேண்டும்.
நாவல் பழமும் மஞ்சளும் இணைந்து வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும்.
இது உடலில் வினைபுரிந்து எரிச்சலை உண்டு செய்யும்.
அதனால் நாவல் பழம் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு மஞ்சள் கலந்த எந்த உணவையும் தவிர்க்க வேண்டும்.
நாவல் பழம் சாப்பிட்ட உடன் பால் குடிக்கலாமா?
நாவல் பழம் சாப்பிட்ட உடன் பால் குடிக்க கூடாது.
ஏனெனில் இது வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது.
நாவல் பழம் சாப்பிட்ட 1 மணி நேரம் வரை பால், பால் கலந்த திரவங்கள் என்று எதையும் குடிக்க கூடாது.