நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு நாளுக்கு நாள் அதிகரிக்கும்...ஏன் தெரியுமா? தவிர்ப்பது எப்படி?
பெருமாலான நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு.
நீரிழிவு நோயினால் ஏற்படும் முடி உதிர்தலுக்கு சீரான இரத்த ஓட்டம் இல்லாததே என்று சொல்லலாம்.
ஏனெனில் இந்த நோய் இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது.
தமனிகளில் பிளேக் போன்ற நிலையை உண்டாக்குகிறது. இதனால் ஒரு உறுப்பில் இருந்து மற்றொரு உறுப்புக்கு இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

கூந்தலில் மயிர்க்கால்களுக்கு அதன் வேலையை செய்ய ஊட்டச்சத்துக்கள் தேவை. நீரிழிவு நோயினால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களை அடைவதில்லை.
இதனால் உச்சந்தலை நுண்ணறைகளை பலவீனப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.
நாள்பட்ட சர்க்கரை நோய் ஆக்ஸீஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை குறைக்கலாம். இதன் விளைவாக வாஸ்குலர் குறைபாடு இது முடி உதிர்தல், கூந்தல் உடைவு, முடி உதிர்தல் உண்டாக்கும்.

ஆரம்பக்கட்ட அறிகுறிகள்
நீரிழிவு இருப்பவர்களுக்கு இயல்பாகவே வறண்ட சருமம், அரிப்பு போன்ற பிற வகையான தோல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது தொற்றுகள் அதிகரிக்கும்.

ஃபோலிகுலிடிஸ் என்பது ஒரு வகை பாக்டீரியா தோல் தொற்று. இது மயிர்க்கால்களில் பாதிப்பை உண்டாக்கி முடி உதிர்வை ஊக்குவிக்கும்.
எனினும் சர்க்கரை நோயாளிகள் முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகள் முடி உதிர்தலுக்கு சிகிச்சை
உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
உடலில் இரத்த சர்க்கரை அளவு அளவாக இருந்தால் மயிர்க்கால்கள் மற்றும் முடியின் முனைகளில் ஆக்ஸிஜன் விநியோகம் தடையில்லாமல் பெற முடிகிறது.

இதனால் முடி உதிர்வு தடுக்கப்பட்டு முடி வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படுகிறது. உணவு முறையில் சர்க்கரை அளவை குறைத்து மெலிந்த புரதங்களை சேர்க்க வேண்டும்.
இது முடியின் வலிமையை மேம்படுத்தவும், உச்சந்தலையை வலுவாக வைக்கவும் உதவும்.
மருத்துவரின் உதவி
நீங்கள் பயோட்டின் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதாக இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பெயரில் எடுப்பது நல்லது.
நாள் ஒன்றுக்கு 30 மி.கி அளவு பரிந்துரைக்கப்பட்டது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகளாக எடுக்கும் போது மருத்துவரை அணுகி தேவையான அளவு எடுத்துகொள்ள வேண்டும்.

சீரான இடைவெளியில் உங்கள் சர்க்கரை அளவை பரிசோதிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
இதனால் சர்க்கரையினால் உண்டாகும் பக்கவிளைவுகளை தவிர்க்க முடியும்.