மூலநோயினால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமா? 40 வயதை கடப்பவர்களுக்கான எச்சரிக்கை!
பொதுவாக நாம் செய்கின்ற சின்ன சின்ன தவறுகளால் நமது உடலில் காலப்போக்கில் பெறும் விளைவுகள் ஏற்படுகின்றன.
உதாரணமாக, பசிக்கும் போது சாப்பிடாமல் தாங்கிக் கொள்ளுதல், உடலுறவின் போது சிறுநீர், மலம் கழிக்காமல் இருத்தல் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து தொழில் புரிதல் போன்ற தவறுகளினால் நாம் 40 வயதைக் கடக்கும் போது மூலநோய் ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் மூலநோய் என்றால் என்ன? அதன் விளைவுகள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
மூலநோய் என்றால் என்ன?
நாம் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள தவறும் பட்சத்தில் காலப்போக்கில் மலம் கழிக்கும் போது நாம் அதிகம் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் எரிச்சல் மற்றும் ரத்தப் போக்கு ஏற்படும் இதையே மூலநோய் என்கிறோம்.

மூலநோய் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?
- நார்ச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உட்கொள்ளுவதனால் மலம் கழிப்பதில் சிக்கல் போது ஏற்படும் அழுத்ததினால் இந்நோய் ஏற்படும்.
- அடிக்கடி நீர் அருந்தாமையினால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்ட குடல் இளக்கத்தினால் இந்நோய் தோன்றும்.
- அதிக உடலுறவு மற்றும் அதிக காரமான உணவு உண்ணும் பெண்களின் குழந்தைப்பேற்றின் போது அதிக அழுத்தம் கொடுத்து முக்குவதால் ஏற்படும்.
- அதிகமாக புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப்பொருட்கள் பாவணையால் ரத்தக்குழாய்கள் பாதிப்படைந்து மூலநோயை ஏற்படுத்தும்.
- ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு மற்றும் புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி மூலநோய் உண்டாக்கிறது.

தடுக்கும் உணவு பழக்கங்கள் தெரிந்துக் கொள்வோமா?
நாம் உண்ணும் உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள், தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்த்துக் கொள்வதால் சபிப்பாட்டுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.

அடிக்கடி நீர் அருந்தவேண்டும் இதனால் தினமும் காலை மாலை மலம் கழித்தல் முடியும், மலம் கழித்தலில் ஏற்படும் சிக்கல் குறையும்.
மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது. தினமும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் உடலுக்கு சிறந்தது.

உணவில் விளக்கெண்ணை, நெய், வெங்காயம், தவறாது சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இது போன்ற உணவுப் பொருட்கள் நாம் மலம் கழிக்கும் இருக்கம் ஏற்படாமல் தடுக்கும்.
பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் வெளிபக்கம் இருக்கும் மூலம் கரைந்து விடும்.
மூல நோய்க்கு சிறந்த மருந்தாக துத்தி இலை பாரக்கப்படுகிறது. அதனை இரண்டு கை அளவு துத்தி இலை, நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் பத்து, அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
