ரூ.1-க்கு இட்லி விற்ற பாட்டியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
கோவையில் ரூ.1-க்கு இட்லி வழங்கி வரும் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு கட்டித்தருவதாக ஆனந்த் மகேந்திரா கூறியதையடுத்து, இன்று அதற்கான ஆவணங்களை வழங்கியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டீவாக இருப்பவர் தான் இந்திய தொழிலதிபர்களின் ஒருவரான மகேந்திர நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா.
இவர் இளைஞர்கள், சிறுவர்களின் திறமைகனை அவதானித்தால் அவர்களுக்கு தனது கருத்துக்களை பதிவிடுவதுடன் சில உதவிகளையும் செய்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் கோவையைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டி பொருளாதார ஏற்றமாக இருந்தாலும் தான் ரூ 1க்கு இட்லி வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
One of those humbling stories that make you wonder if everything you do is even a fraction as impactful as the work of people like Kamalathal. I notice she still uses a wood-burning stove.If anyone knows her I’d be happy to ‘invest’ in her business & buy her an LPG fueled stove. pic.twitter.com/Yve21nJg47
— anand mahindra (@anandmahindra) September 10, 2019
அவரைப் பாராட்டிய ஆனந்த் மகேந்திரா அவருக்கு வீடு கட்டித்தருவதாக உறுதி கொடுத்தார். இந்த நிலையில், தற்போது மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைப்ச்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதைப் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கியுள்ளது.
அந்த நிலத்தில் கமலாத்தாளுக்குக்கான வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கியிருக்கிறது.அதேபோல கோவையில் உள்ள பார்த் கேஸ் நிறுவனம் ஏற்கெனவே கமலாத்தாளுக்கு இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கிய நிலையில், அதற்கான எரிவாயு உருளையும் இனிமேல் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.