குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகல்! உடனடியாக குட் நியூஸ் சொன்ன மணிமேகலை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதும் தன்னுடைய பதிவொன்றில் பதிலளித்திருக்கிறார் மணிமேகலை.
மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது.
இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது.
இந்நிகழ்ச்சியில், கோமாளியாக கலக்கிவருபவர் மணிமேகலை, விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர்.
இவ்வாறு எல்லா மக்களாலும் விரும்பப்பட்டவர் திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்.
குட் நியூஸ்
மேலும், நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணங்களாக அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் வேறு பல வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்கள்.
குறித்த பதிவில் கணவர் ஹுசைனுடன் நிலத்திற்கு பூஜை செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு HM பண்ணை வீடு பாலக்கால் பூஜை, கடவுளின் அருளால், கடின உழைப்புடனும் எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்குகிறோம், கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். கனவு காணுங்கள் என தலைப்பிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்து விட்டு பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.