மார்பக வீக்கத்தால் அவதியா? எளிதில் சரிசெய்ய இந்த கசாயம் மட்டும் போதும்
பெண்களின் அழகை மெரூகூட்டி காட்டுவதில் மார்பகங்களுக்கு முக்கிய பங்குண்டு, பருவமடைதலின் முக்கிய அறிகுறியே மார்பகங்களின் வளர்ச்சி தான்.
ஏதேனும் ஒரு காலகட்டத்தில் பெண்களின் மார்பகங்களில் வலி ஏற்படலாம், குறிப்பாக மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படும், இதுதவிர நோய்த்தொற்று, அழற்சி, தாய்ப்பால் கொடுத்தல் போன்ற காரணங்களினாலும் வலி ஏற்படும்.
ஒன்று அல்லது இரண்டு மார்பகங்களிலும் கூட வலி ஏற்படும், இதற்கான வீட்டு வைத்தியம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முட்டைக்கோஸை பயன்படுத்துவது எப்படி?
ஒரு மணிநேரம் முட்டைகோஸை ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளுமை அடைந்த பிறகு, அதன் வெளிப்புற இலைகளை உரித்து வீசி விட்டு, இரண்டாம் அடுக்கு லேயர் இலைகளை எடுத்து பயன்படுத்த வேண்டும்.
இரண்டாம் அடுக்கு இலைகளை பயன்படுத்தும் முன்னர் அதை இதமான நீரில் கழுவி கொள்ளுங்கள். அந்த முட்டைகோஸ் இலைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஸ்டெம் பகுதியை நீக்கிவிடுங்கள். இலைகளை சரியாக மார்பக பகுதியில் நிற்கும் படி வைக்க வேண்டும். முலைகாம்பு பகுதியில் மட்டும் படாதபடி பார்த்துக் கொள்ளவும்.
இப்போது சுத்தமான அந்த முட்டைகோஸ் இலைகளை மார்பகத்தை கவர் செய்தது போல கட்ட வேண்டும். இதை 20 நிமிடங்கள் வைத்திருந்தால் போதுமானது. அதன் பிறகு நீக்கிவிடலாம்.
வீக்கத்தை குறைக்கும் கசாயம்
வேப்ப மரப்பட்டை- 10 கிராம்
சுக்கு- 10 கிராம்
மிளகு- 10 கிராம்
கடுக்காய்த் தோல்- 10 கிராம்
செய்முறை
முதலில் வேப்பமரப்பட்டை, சுக்கு, மிளகு மற்றும் கடுக்காய் தோல் ஆகியவற்றை எடுத்து சுத்தப்படுத்தி உடைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி உடைத்து வைத்துள்ள பொருட்களை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும், இந்த தண்ணீரின் அளவு 50 மிலி அளவாக சுண்ட வைத்து இறக்கி வைத்து வடிகட்டி குடிக்கவும்.
இந்த கசாயத்தை காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் தலா 15 மிலி அளவு சாப்பிடும் முன்பு குடித்து வந்தால் வீக்கம் குறையும்.